இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஒரு கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீசாந்த், கடந்த 2005-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது இந்திய அணியில் அறிமுகமானார். இவர், 2007-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஸ்ரீசாந்த், தனது வாழ்நாள் முழுவதும் மதராசி என்று அழைக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
13 வயதில் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்தே மதராசி என்ற வார்த்தையை தாம் கேட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த், இவ்வாறு தெரிவித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அவரது கருத்து, இந்திய கிரிக்கெட்டில் இனவெறி இருக்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க : ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி – சென்னை அணி வீரர்கள் கொடுத்த சப்ர்ரைஸ்..
2005 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ஸ்ரீசாந்த் 2011 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். பவுலரான ஸ்ரீசாந்த் 27 டெஸ்டில் விளையாடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
தற்போது சில தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவின் நண்பர் கேரக்டரில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
