ஜெம்போல் ஒருங்கிணைந்த முழு குடியிருப்புப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவர்கள் உணவு விஷம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நெகிரி செம்பிலான் கல்வி இயக்குனர் டாக்டர் ரோஸ்லான் ஹுசின் கூறுகையில், நேற்று இரவு முதல் கோல பிலாவில் உள்ள துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் படிவம் ஒன்று முதல் படிவம் ஐந்து வரையிலான 15 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியின் டைனிங் ஹாலில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு உணவு விஷமாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார். அதற்கு முன், 24 மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஒன்பது மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், 20 மாணவர்களுக்கு (லேசான பாதிப்பு) மருந்து வழங்கப்பட்டது. மருத்துவமனையில் இன்னும் 15 மாணவர்கள் உள்ளனர்.


