இந்நிகழ்ச்சியில் பயிலரங்குகள்,உரைகள்,இதர நடவடிக்கைகள் என்று 360 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளன.மேலும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சிக்கு 180 க்கும் மேற்பட்ட பங்காளித்துவ அமைப்புகள் கை கொடுத்து ஏற்பாடு செய்துள்ளனர்.
அதில் ரிப்பளிக் தொழில்துறை கல்லூரியானது ‘பசுமை பயணம்’ என்ற நடவடிக்கைகளின் மூலம் பசுமையின் நிலையான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
மற்றொரு பங்காளித்துவ அமைப்பு OCBC வங்கி,இது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும் ,பொருட்களை மறு பயனீடு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.
இந்த OCBC வங்கியானது மக்களிடையே பசுமையை நோக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதே சமயம் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் பல பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

