மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் 2022-ல் மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்திக் கொலை செய்த 24 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
அத்ரைலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான சரோஜ் கோல் என்பவரை, 24 வயது மருமகள் காஞ்சன் 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கடந்த 2022ல் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது மாமியாரும், மருமகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகள் சரமாரியாக மாமியாரை குத்தியுள்ளார்.

