சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) சிங்கப்பூரில் ஷாப்பிங்கை இன்னும் எளிதாக்க உள்ளது.
கடைக்காரர்களுக்கு ஆள் பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்க இது பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AI தேடல் உதவியாளர் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒருவரின் வசதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப எதை வாங்குவது என்று பரிந்துரைக்கும்.
ஷாப்பிங் செய்பவர்களுக்கு எளிதாக பொருட்களை தேர்ந்தெடுக்கவும், விற்பனையாளர்கள் பொருட்களை சிறப்பாக விற்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிதும் உதவி புரியும் வகையில் அமைந்துள்ளது.

