உலகக்கோப்பை டி20 தொடரில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்க வைக்குமா அல்லது வெளியேறி விடுமா என்பது இன்று நடைபெறவுள்ள கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முடிவில் தெரிய வரும்.
இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி இரண்டிலும் தோல்வியடைந்து 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் அந்த அணி தொடரை விட்டு வெளியேறி விடும்.
கனடா அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 1 இல் வெற்றி பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளது. 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 20 அணிகள் 4 குரூப்புகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு குருப்பிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் சூப்பர் Eight சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் குருப் ஏ-வில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க் நகரில் தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி கனடாவை எதிர்கொள்கிறது. குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்க அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் Super Eight சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவாகவே உள்ளன.
இன்றைய ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் நியூயார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி பவுலிங்கில் வலிமையாக இருந்தாலும், பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுடன் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதையும் படிங்க – நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுமா?
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பயிற்சியாளர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் மாற்றப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)