இவற்றின் மத்தியில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு பலரும் வாழ்த்துகளை பரிமாறி வருவதன் மத்தியில், கவிஞர் வைரமுத்துவும் நாம் தமிழர் சீமானை வாழ்த்தியுள்ளார்.
’மக்களவைத் தேர்தலில்
8.19 விழுக்காடு
வாக்குகள் பெற்றுத்
தேர்தல் ஆணையத்தின்
அங்கீகாரம் பெற்ற
நாம் தமிழர் கட்சியையும்
அதன் தலைமை
ஒருங்கிணைப்பாளர்
சீமானையும் பாராட்டுகிறேன்…’ என்று தொடங்கும் கவிதையை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அவர் பாராட்டு தெரிவித்திருக்கிறார். அதனை இணையவாசிகள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

