நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருள்களில் உடலுடன் சேர்த்து மனத்திற்கும் நன்மை அளிக்கக்கூடியவை ஏராளம். நவீனமயமாதலின் விளைவாக இந்த வீட்டு உபயோகப் பொருள்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துவரும் நிலையில், பழமையும் பாரம்பரியமும் மாறாத சில பொருள்கள், அவற்றின் தனித்தன்மை காரணமாக மக்களால் விரும்பி உபயோகப்படுத்தப்பட்டே வருகின்றன.
அப்படி நாம் இன்றளவும் விரும்பி உபயோகிக்கும் பொருள்களில் ஒன்று கயிற்றுக் கட்டில். வெயில் நிரம்பிய மதிய வேளையில் மனத்திற்கு இதமான மர நிழல், நிழலின் அடியில் அமர ஒரு கயிற்றுக் கட்டில், மனத்தை ஆசுவாசப்படுத்தும் காற்று, இதைவிட அருமையாக எவ்வாறு ஓய்வுப்பொழுதை நாம் கழிக்க முடியும்?
கிராமத்து மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக விளங்கும் இந்தக் கயிற்றுக் கட்டிலை விரும்பி உபயோகிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. இத்தகைய கயிற்றுக் கட்டில்களைச் செய்யும் பணியினை முழுவீச்சில் செய்துவருகின்றனர் நாமக்கல் துறையூர் ரோடு கூலிப்பட்டி பகுதியில் உள்ள கணவன் மனைவி இவர்கள் சுமார் 10 வருடமாக இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.
ஒரு கயிறு கட்டிலை தயாரிக்க ஒரு இடத்தில் இருந்து இரும்பு கம்பியையும் இன்னொரு இடத்தில் இருந்து கயிறையும் தனித்தனியே வாங்கி அதை ஒன்றாக இணைத்து பின்னி முழு கட்டிலாக தயார் செய்து விற்பனை செய்கின்றனர்
மேலும், கயிற்றைக் கட்டுவதற்குப் பதிலாக, கைத்தறி நெசவு செய்வதுபோல் பின்னி, வடிவமைத்து, அவற்றை அழகூட்டி கயிறு பின்னுவதில் என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றதோ அனைத்தையும் சரி சரி செய்து வாடிக்கையாளர்கள் விரும்பியது போல் செய்து கொடுப்பதில் திறமை மிக்கவர்
இது குறித்து கட்டில் செய்து விற்கும் மணிமேகலை சீனிவாசனிடம் கேட்டபோது .இவ்வகைக் கட்டில்களை மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர் என்றும், இதனால் மனத்திற்கும் உடலுக்கும் நிறைய நன்மைகள் உண்டென்றும் கூறினார் குறிப்பாக பித்தம் தொடர்பான பிரச்னைகள் இக்கட்டிலில் படுத்துறங்குவதால் நீங்குவதாகவும் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
