ஜாலான் செராஸ் மேம்பாலத்தில் விரிசல் இல்லை என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம், தித்திவாங்சா-பந்தாய் விரைவுச்சாலை சலுகை நிறுவனம் தெரிவித்துள்ளது. X இல் ஒரு இடுகையில், பொதுப்பணித் துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி, சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.
மேம்பாலத்தில் அதிகரித்து வரும் விரிசல்களை சுட்டிக் காட்டிய X இல் ஒரு இடுகைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி முழுமையாக திறக்கப்பட்ட எஸ்பிஇ, இரட்டை-இரண்டு வழிப்பாதை, ஏழு உயர்த்தப்பட்ட சாலைகளை உள்ளடக்கியது. விரைவுச்சாலை நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதாவது கெரிஞ்சி-சாலாக் (பிரிவு 1), சாலாக்-பாண்டான் (பிரிவு 2), பாண்டான்- தித்திவங்சா (பிரிவு 3), தித்திவங்சா- தாமான் மெலாத்தி (பிரிவு 4), என மொத்தம் 20.7கிமீ தூரம் உள்ளது. இது ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலை, அம்பாங்-கோலாலம்பூர் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை (அக்லே), டூத்தா-உலு கிளாங் எக்ஸ்பிரஸ்வே (DUKE), கோலாலம்பூர் மத்திய சாலை 2 (MRR2) உள்ளிட்ட பல நெடுஞ்சாலைகளை இணைக்கிறது.


