குளுவாங், ஜாலான் பத்து பஹாட்-மெர்சிங் 50ஆவது கி.மீட்டரில் 68 வயதான ஓய்வு பெற்றவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சனிக்கிழமை (ஜூன் 8) காலை 11.25 மணியளவில் நிகழ்ந்ததாக குளுவாங் OCPD உதவி ஆணையர் பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் ஸ்ரீ லாலாங்கிலிருந்து பண்டார் குளுவாங் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரின் தலை சாலை தடுப்பின் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ACP Bahrin மேலும் கூறுகையில், பாதிக்கப்பட்ட Md Latif Achil என அடையாளம் காணப்பட்டவர், குளுவாங்கில் இருந்து அரசாங்க ஓய்வு பெற்றவர். கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனமோட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 1987ஆம் ஆண்டு சாலை மற்றும் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


