மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை பதவியேற்க வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், அனைத்துத் தலைவர்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை பதவியேற்குமாறு வலியுறுத்தினர். அது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் புது தில்லியில் இன்று கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து கார்கே உரையாற்றினார்.
தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை மிகச் சிறப்பாக மேற்கொண்டதற்காக ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

