இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து, வீடுகளின் விற்பனை நேரம் கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என விரும்புகின்றனர். பொருளாதார சூழல் காரணமாக அது சிலருக்கு சாத்தியம் ஆகாவிட்டாலும், மத்திய, மாநில அரசுகளின் வீட்டுவசதி திட்டங்களால் பெரும்பாலானோர் பலனடைந்து வருகின்றனர்.
சிலருக்கு ஏற்கெனவே வீடு இருந்தாலும், முதலீடு அடிப்படையில் வீடுகளை வாங்குவோரும் இருக்கிறார்கள். இந்த நிலையில், பல்வேறு விதிமுறைகள் மற்றும் வட்டி விகிதம் உயர்வு போன்ற காரணங்களால் வீடுகள் விற்பனை பெரும் சரிவைக் கண்டது. இதனால், கட்டப்பட்டு விற்கப்படும் வீடுகளை விற்பனை செய்ய பல ஆண்டுகள் பிடித்தன. ஆனால், 2019 முதல் வீடுகளை விற்பனை செய்வதற்கான கால அவகாசம் படிப்படியாக குறைந்து வருகிறது.
குறிப்பாக, ரூ.75 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் மலிவு விலை வீடுகளையும், ரூ.1.5 கோடி முதல் ரூ.3 கோடி வரையிலான வீடுகளையும் கணக்கில் எடுத்தால், டெல்லி, மும்பை, புனே. பெங்களூரு, சென்னை, ஐதரபாத், கொல்கத்தா ஆகிய 7 நகரங்களில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதாவது, பில்டர்கள் வீடுகளை கட்டிவிட்டு, அதை விற்பனை செய்ய பல ஆண்டுகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
ஆனால், 2019ஆம் ஆண்டில் இருந்து தற்போது அது 31% அளவுக்கு குறைந்துள்ளது. இந்த மாற்றம் வீட்டு வசதித்துறையில் ஒரு முக்கியமான வளர்ச்சியை குறிக்கிறது. அதாவது, 2019ஆம் ஆண்டு இறுதி கணக்கெடுப்பின்படி, ஒரு வீட்டை கட்டி, அதை விற்பனை செய்ய 32 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வீடுகள் விற்பனை அதிகரித்து, தற்போது வீடு விற்பனைக்காக காத்திருப்பு காலம் வெறும் 22 மாதங்களாக குறைந்துள்ளது.
2019 முதல் 2024 வரை கடந்த 5 ஆண்டுகளில், 7 முக்கிய நகரங்களில் சுமார் 10 லட்சம் வீடுகள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அதில், 2024 மார்ச் மாதத்திற்குள் 4,68,000 வீடுகள் மட்டுமே விற்காமல் இருந்தன. இது கடந்த 5 ஆண்டுடன் ஒப்பிடும்போது பெரிய வளர்ச்சி என்று கட்டுமானத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
