சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் பண்ணைப்பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நாளை மாலை ஐந்து மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது அமைப்புகள் விடுத்துள்ள அழைப்பு
இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு அனோஜனின் விடுதலைக்கு ஆதரவுக்கரம் நீட்டுமாறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தற்போது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை அரசாங்கமும் அனோஜனின் விடுதலைக்காக தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் என அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

