ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணம் வருகிற ஜூலை 12 திகதி நடைபெறவிருக்கிறது. இதற்கான முந்தையை கொண்டாட்டத்தை அக்குடும்பத்தில் உள்ளவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதையடுத்து இரண்டாம் திருமண விழா மே 28 முதல் 30 வரை சொகுசு கப்பலில் நடைபெற்றது. இத்தாலியின் நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் பயணத்தை முடித்தது.
இந்த விழாவில் சுமார் 800 விருந்தினர்களும் விருந்தினர்களைக் கவனிப்பதற்காக 600 பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டார்கள். இந்நிலையில் அக்கொண்டாட்டமானது இத்தாலியில் உள்ள மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு முந்தைய ஆடம்பரமான கொண்டாட்டத்திற்காக இத்தாலியில் உள்ள அழகிய கடற்கரை நகரங்களான போர்டோபினோ மற்றும் ஜெனோவா அம்பானி குடும்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
இயற்கை எழில் சூழ்ந்த இந்த நகரங்களில் அம்பானி குடும்பத்தின் ஆடம்பரமான கொண்டாட்டங்கள் உள்ளூர் மக்களை வருத்தமடையச் செய்துள்ளதாகவும் அவர்களுடைய அன்றாட வேலையை செய்யமுடியாமல் சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.ஜூன் 2 அன்று, உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பயணக் கப்பல் ஜெனோவாவிற்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது, அதிகாலை மணி நேரத்தில் சத்தமான மேளதாளத்தை எழுப்பினார்கள்.இது குறித்து பலமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


