ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிப்பதற்கான அமெரிக்காவின் சட்டத்திற்கு, அந்நாட்டின் கீழ்சபையிலும், மேல்சபையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டால், இது அமலுக்கு வந்துவிடும்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் உள்ளது.
இதனால், அமெரிக்காவின் “ரஷ்ய தடை சட்டம்’ அமலுக்கு வந்தால், இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘அமெரிக்காவின் இந்தச் சட்டம் பிற நாடுகளின் இறையாண்மையைப் பாதிக்கும்’ என்று வலுவான குரல் எழுந்து வந்தன.
அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்து மத்திய அரசு எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை என்று இந்தியாவில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

