International
oi-Vigneshkumar
மியாமி: அமெரிக்காவில் பால்டிமோரில் இருந்து மியாமி நோக்கி சென்ற விமானத்தில் பெண் ஒருவர் திடீரென தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றி, சக பயணிகள் முன்னிலையில் ஆபாசமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விமானம் தரையிறங்கிய உடனேயே அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
விமானத்தில் பொதுவாகவே கட்டுப்பாடுகள் எல்லாம் கடுமையாக இருக்கும். சிறு விஷயங்கள் கூட உயிரை பறிக்கும் சம்பவமாக மாறலாம் என்பதால் கடுமையான விதிகள் இருக்கும். ஆனால், அதையும் மீறி சில பணிகள் முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

என்ன நடந்தது
அதாவது அமெரிக்காவில் பால்டிமோரில் இருந்து விமானம் வழக்கம் போல புறப்பட்டுள்ளது. மியாமி நோக்கி சென்ற அந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் திடீரென தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றி, சக பயணிகள் முன்னிலையில் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையடுத்து விமான ஊழியர்கள் உடனடியாக விமானியின் அறைக்கு தகவல் தெரிவித்து, விமானம் தரையிறங்கியதும் போலீசாரை வரவழைக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் AA1779 விமானத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்டிமோர்/ வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மியாமி நோக்கி புறப்பட்ட ஏர்பஸ் A319 விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆடைகளை கழற்றி போட்டு!
விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, 9D இருக்கையில் அமர்ந்திருந்த பெண் தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றியதாகவும், சக பயணிகள் முன்னிலையில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகவும் விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமானப் பணிப்பெண் உடனடியாக விமானத்தின் காக்பிட், அதாவது பைலட்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் கண்ட்ரோல் மையத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், விமானம் தரையிறங்கியதும் போலீசார் வந்து அந்த பெண்ணை அழைத்து செல்ல வேண்டும் என்றும் விமான ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். பெண் இதுபோல ஆடைகளை கழற்றிவிட்டு ஆடியதால் சிறு குழப்பம் ஏற்பட்ட போதிலும், விமானம் அவசரமாக வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடவில்லை. விமானம் தொடர்ந்து மியாமி நோக்கி பயணித்தது. அதே நேரத்தில் ஏர்போர்ட் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.
கைது
விமானம் மியாமி சர்வதேச விமான நிலையத்தை அடைந்தபோது, போலீசார் ஏற்கனவே விமானம் நிறுத்தப்பட்ட கேட்டில் காத்திருந்தனர். விமானம் தரையிறங்கியவுடன் அந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 11.23 மணியளவில் ஏர்போர்ட்டிற்கு வந்த நிலையில், உடனடியாக அந்த பெண் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் விமானத்தில் இருந்து அனுப்பப்பட்ட ACARS எனப்படும் ரிப்போர்ட் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தாமதம்
இந்த குழப்பம் காரணமாக விமானம் திட்டமிட்ட நேரத்தை விட சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக, இரவு 9 மணிக்குப் பிறகு பால்டிமோர்/வாஷிங்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. மியாமி சென்றடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. இதற்கிடையே யார் அந்த பெண்.. அவர் ஏன் இதுபோல நடந்து கொண்டார்.. இதற்கு முன்பும் அவர் இதுபோல ஏதேனும் நடந்து கொண்டு இருக்கிறாரா என்பது குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

