நகைச்சுவை அல்லது அந்தரங்கப் படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிப் பணம் அல்லது பலன்களைப் பெற்றுக்கொள்ளும் ‘செக்ஸ்டோர்ட்ஷன்’ (Sextortion) எனப்படும் இணையவழி குற்றச் செயல் குறித்துப் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பிரிவு (SLCERT) எச்சரித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்தி செயலிகள் (messaging apps), டேட்டிங் தளங்கள் அல்லது ஆன்லைன் விளையாட்டுகள் ஊடாக எவரையும் இலக்குவைத்து இக்குற்றங்கள் இழைக்கப்படலாம். குற்றவாளிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னரே அந்தரங்கப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு, பின்னர் பணம் அல்லது பிற உதவிகளைக் கோரி மிரட்டல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும், உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் பயன்படுத்தி, குற்றவாளிகள் போலி ஆபாச டீப்ஃபேக் (deepfake) படங்களை உருவாக்கி அவற்றைக்கொண்டும் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்: குற்றவாளிகளுடன் மேற்கொண்டு தொடர்புகளைத் தொடர்வதை உடனடியாக நிறுத்தவும்.
செய்திகள் மற்றும் மிரட்டல்கள் போன்ற சாட்சிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
கணக்குகளைத் தடுப்பதற்கு (block) மற்றும் புகாரளிப்பதற்கு (report) முன்னர் உரிய உதவியை நாடவும்.
தனிப்பட்ட அல்லது அந்தரங்கப் பொருட்களை ஆன்லைனில் பகிர்வதில் அவதானமாக இருக்குமாறும், எளிதில் விசுவாசமற்ற அந்நியர்களை நம்ப வேண்டாம் எனவும், சந்தேகத்திற்கிடமான கணக்குகளைத் தடுப்பது மற்றும் புகாரளிப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அச்சுறுத்தல்கள் எற்படும் பட்சத்தில், “நீங்கள் குற்றவாளி அல்ல, மாறாகப் பாதிக்கப்பட்டவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

