காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
கீழே விழுந்த மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (14.09.2026) காலை சுமார் 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவி படுகாயம்
இது தொடர்பான விசாரணைகளில் தெரியவருகையில் குறித்த மாணவி அந்தப் பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தை அடுத்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மாணவி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மாணவியின் தந்தை, தொலைபேசி பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு வீட்டில் அவருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மாணவி கீழே குதித்தாரா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

