
டி.கே.ஜி. கபில
‘குஷ்’ வகை போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்து, அதனைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான சிவப்புப் பாதை (Red Channel) ஊடாக வெளியே கொண்டு செல்ல முயற்சித்த இலங்கைப் பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மாத்தறை, வெலிகமப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகர் ஆவார். ‘குஷ்’ வகை போதைப்பொருளின் பெறமதி ரூ. 6,680,000 (அறுபத்தி ஆறு இலட்சத்து எண்பதாயிரம்) பெறுமதியான
04:30 மணிக்குத் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏமன்ஸ் விமான சேவையின் UL-405 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
இந்த ‘குஷ்’ போதைப்பொருள் 668 கிராம் எடைக் கொண்டதாக இருந்ததுடன், மூன்று உருண்டைகளாகத் தயாரிக்கப்பட்டு, செல்லோடேப்பால் நன்றாக ஒட்டப்பட்டு, அவர் அணிந்திருந்த காற்சட்டையின் பக்கவாட்டுப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த விமானப் பயணியும் அவர் கொண்டுவந்த ‘குஷ்’ போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

