எல் நினோ காலநிலையின் சாத்தியமான தாக்கங்களில் இருந்து தென்னை விவசாயத்தைக் பாதுகாக்கவும், அதன் பாதிப்புகளைக் குறைக்கவும் தென்னை பயிர்செய்கை சபை ஒரு சிறப்பு மானியத் திட்டத்தைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
தென்னை உற்பத்தி
அதேவேளை, இதுவரை எல் நினோ நிலையினால் தென்னை பயிர்ச்செய்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், வரவிருக்கும் மாதங்களில் வறட்சியான வானிலை நீடித்தால், அது தென்னை உற்பத்தியைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

