கத்தோலிக்க மதத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்குமிடையே சந்திப்பு






கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையே சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், எந்தவிதமான இனவாத அல்லது மதரீதியான வெறுப்புணர்வையும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டம் குறித்து இச்சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மக்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய அழிவுகளை தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
அனைத்து சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாராட்டியதுடன், இந்த முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கத்தோலிக்க சமூகத்தினர் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது உட்பட அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அருட்தந்தை சிறில் காமினி, அருட்தந்தை ஜூலியன் பெற்றிக் மற்றும் அருட்தந்தைமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்து குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு






கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கும், நாட்டின் எதிர்கால சந்ததியை வீழ்ச்சிக்கு உட்படுத்தி வரும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கும் இந்து குருமார்கள் தமது ஆசிகளை வழங்கினர்.
கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த இந்து குருமார்கள் குழுவினர் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.
மதம் அல்லது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், மதத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டியது அனைவருக்கும் அன்பைப் பகிர்ந்தளிப்பதேயாகும் என்றும் இந்து குருமார்கள் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினர்.
போதைப்பொருள் பேரழிவுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது என்பது எந்தவொரு தனிநபராலும் அல்லது நிறுவனத்தாலும் மாத்திரம் செய்யக்கூடிய ஒரு விடயமல்ல என்றும், முழு சமூகமும் இணைந்து ஏற்க வேண்டிய தேசியப் பொறுப்பு என்பதைப் புரிந்து கொண்டு, அதனை முழுமையாக ஒழிப்பதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் தீவிரப் பங்களிப்பும் அவசியம் என்று சுட்டிக் காட்டிய இந்து குருமார்கள், அந்த தேசிய வேலைத்திட்டத்தைத் தொடர்ச்சியாகவும் வலுவாகவும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்குத் தமது ஆசிகளைத் தெரிவித்தனர்.
குறிப்பாக, இதுபோன்ற தேசியத் தேவைகளின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து வாழும் அனைத்து இந்து குருமார்களும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்கிக் தருமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதுடன், இந்து அறநெறிப் பாடசாலைகளை நடத்துவது உள்ளிட்ட இந்து பக்தர்களுக்கு உள்ள பிரச்சினைகளை கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள அதன் மூலம் வாய்ப்பு ஏற்படும் என்றும் சுட்டிக் காட்டினர்.
பல்வேறு மதப் பாரம்பரியங்கள், நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களைக் கொண்ட இந்து மதத்திற்கு ஒற்றைத் தலைமைத்துவக் கட்டமைப்பு இல்லாததால், அதன் பன்முகத்தன்மையை ஒரே முறையில் ஒருங்கிணைக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த மத அடையாளங்களையும் பல்வேறு பாரம்பரியங்களையும் அவ்வாறே பாதுகாத்துக்கொண்டு, பொதுவான சமூக நோக்கங்களுக்காகக் கூட்டாகச் செயற்படக்கூடிய குருமார்களின் ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்து மதப் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்புடன் பொதுவான சமூகச் செயற்பாடொன்றை உருவாக்குவதற்கு அவசியமான வேலைத்திட்டத்தை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரின் பங்களிப்புடன் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இராமகிருஷ்ண மிஷனின் கொழும்பு நிலையப் பொறுப்பாளர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ் (Swami Aksharatmananda Maharaj), சின்மயா மிஷனின் கொழும்பு நிலையப் பொறுப்பாளர் சுவாமி குணாதீத்தாநந்த சரஸ்வதி (Gunantitananda Saraswathi), பிரம்மசிரி எஸ். சிவநேசன் சர்மா (Brammasri S. Sivaneshan Sarma),சத்தியசீலன் உமாகாந்த் சிவாச்சாரியார் (Saththyaseelan Umakanth Sivachchariar) உள்ளிட்ட குருமார்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்

எந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லது அச்சம் ஏற்படாத வகையிலான சூழலை உருவாக்குவதும், அவர்களின் உள ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அரசியல் ரீதியாக செயற்படும் இனவாதப் போக்குகள் மற்றும் உள்ளக மோதல்களின் தன்மையை சரியாகப் புரிந்து கொண்டு, மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் எவ்வித இனவாத மோதல்களும் ஏற்பட இடமளிக்கவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஊழல் மோசடிகள் தொடர்பிலோ அல்லது சட்டத்தின் ஆட்சியின் ஆதிக்கம் தொடர்பிலோ தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது நிலையில், சில குழுக்கள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைப் பாராட்டிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்கள், அதற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக, இளைஞர் சமுதாயத்தைப் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து மீட்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ”முழுநாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வேலைத்திட்டம் என்பன தொடர்பில் இதன் போது பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளை இனவாத மோதல்கள் அற்ற இரண்டு ஆண்டுகளாக மாற்றியமைத்ததற்காக அரசாங்கத்திற்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த உலமா சபை பிரதிநிதிகள், இருப்பினும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.
ஜனநாயக சமூகமொன்றில் ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்களைக் கேள்விக்குட்படுத்துவதற்கு மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு என்பதைத் தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், எனினும் இனங்களுக்கிடையில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ அல்லது சமூகத்தில் வெறுப்பைப் பரப்புவதற்கோ எவருக்கும் உரிமையில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம் சமூகத்தைக் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் குறித்தும் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும், அச்செயற்பாடுகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.
இஸ்லாமிய நூல்கள் மற்றும் கல்வி சார்ந்த விடயங்கள் தொடர்பில் எழுந்துள்ள சில பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து அப்பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும், தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி அந்நூல்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அரசியலமைப்பு பேரவை போன்ற தேசிய மட்டத்திலான நிறுவனங்களில் முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்துச் சமூகங்களினதும் பிரதிநிதித்துவம் காணப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டதுடன், சீருடைப் பிரச்சினை போன்ற தொழில்நுட்ப அல்லது நிர்வாக ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் இனவாத அல்லது மத ரீதியான பதற்றங்கள் மீண்டும் தலைதூக்குவதைச் சரியாகப் புரிந்து கொண்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் அக்ரம் நூரமித், பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக், பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன், அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் உள்ளிட்ட மௌலவிமார்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு








ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவிற்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மலையகப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாக நடவடிக்கைகள், அறநெறிப் பாடசாலைகளை நடத்திச் செல்லல், குருமார்களின் தேவைகள், அத்துடன் ஆலய காணிகள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இலங்கை மலையக இந்து குருமார்கள் ஒன்றியத்தினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மலையக இந்து குருமார்கள் வாழும் பகுதிகளிலுள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள் உள்ளிட்ட இந்து குருமார் ஒன்றியத்தின் மதத் தலைவர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) கே.பி. யோகசந்திர, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் பொலிஸ்) எம்.எஸ்.பி. சூரியப்பெரும, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால், இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை. அனிருத்தனன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்த செய்தியை தமிழில் மொழிப்பெயர்த்து, எழுத்து பொருள், வசன பிழைகளை திருத்தி , ; : . ? ! “ ” ‘ குறியீடுகளை செம்மையாக்கி சுவாரசியமாக தலைப்பிட்டு தரவும்

