நாட்டின் மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தவித சிக்கலும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்யச் சென்றிருந்த போது பேசிய அவர், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தலாம் எனப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளுக்கான நிலக்கரியைக் கொள்முதல் செய்து கொண்டுவருவதற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

