பொரளை சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, அதில் பயணித்த ஐந்து சந்தேகநபர்கள் மூன்று வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை, சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த குறித்த முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை வழங்கிய போதிலும், அது நிறுத்தாமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், முச்சக்கர வண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

