மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்ட அமைப்புகள்
அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு கொண்டு வருவதாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளதா என இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், எந்தவொரு குற்றவாளியையும் நாட்டிற்கு அழைத்து வரும்போது சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள சட்ட அமைப்புகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு நாங்கள் கேட்ட உடனேயே எந்தவொரு நாடும் சந்தேகநபர்களை ஒப்படைப்பதில்லை எனவும் அதற்கு நீண்ட இராஜதந்திர மற்றும் சட்டப் பூர்வமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் குற்றவாளிகளையும் நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலும் அந்த நடைமுறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், அதனை வெற்றிகரமாக முடிப்பற்குத் தேவையான அதிகபட்ச தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

