Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தங்கத்தை இப்போது வாங்கலாமா என யோசிக்கிறார்கள். அல்லது காத்திருந்தால் இன்னும் கொஞ்சம் குறையுமா என்ற சிந்தனையும் மக்களிடையே இருக்கிறது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய பதிலை கூறியிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சீராக உயர்ந்து வந்த தங்கம் விலை, இந்தாண்டு ஏற்ற இறக்கத்தோடு தான் இருக்கிறது. ரோலர் கோஸ்டர் ரைட் போல தங்கம் விலை ஏறி இறங்கி வருகிறது என சொல்லலாம். அதேநேரம் இப்போது கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை இறங்கு முகத்தில் இருக்கிறது. இதற்கு சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றமே காரணமாக இருக்கிறது.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகையில், “தங்கம் ஒரு மாதிரி ஒரு பிளாட்டோ இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை அப்படி இல்லை. செப்டம்பர் 16-17 என்ன நடக்கிறதோ அதை பொறுத்தே தங்கம் விலை இருக்கும்” என்றார்.
அதாவது அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் வரும் செப்டம்பர் 16-17 தேதிகளில் நடைபெற உள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவை பொறுத்தே தங்கம் விலை இருக்கும். வட்டி விகிதம் நிலையாக இருந்தால் தங்கம் விலை லேசாக சரியும். வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தங்கம் விலை மளமளவென சரியும். இப்போது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு மத்திய வங்கி என்ன முடிவெடுக்க போகிறது என்பதை சர்வதேச நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.
தங்கம் விலை
அதேபோல நேற்றைய தினம் பிரதமர் மோடி மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக பேசிய ஆனந்த் சீனிவாசன், “இரவு 8 மணிக்கு மக்களிடம் வந்து பேசும் நபர் சமீபத்தில் மீண்டும் மக்களிடையே பேசினார். இந்த முறை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வந்தார். நாட்டில் காசே இல்லை என்பது போல சொன்னார். ரியல் பொருளாதாரம் குறித்த சில விஷயங்களை சொல்லாமல் விட்டுவிட்டார். மேலும், இனிமேல் நீங்க எல்லாம் தங்கமே வாங்க கூடாது. தங்கம் எல்லாம் கெட்ட விஷயம்.. நீங்க தங்கம் வாங்காமல் இருந்தால் தான் நல்லது என்றே சொன்னார். அவர் இதுபோல சொன்னவுடனேயே தங்க பிஸ்னஸ் செய்யும் நிறுவனங்களின் சார்ந்த பங்குகள் விலை சரிந்துவிட்டது.
அமெரிக்காவில் நடந்தது
இந்த நியூஸ் பலருக்கும் ஒரு பெரிய ஷாக்காக இருக்கும். ஆனால், எனக்கு பெரிய அதிர்ச்சியாக இல்லை. எப்போதும் அமெரிக்காவில் ரூஸ்வெல்ட் செய்ததை மறந்துவிட வேண்டாம். எப்போது வேண்டும் என்றாலும் இந்த 8 மணி வாத்தியார் இன்ஸ்டாகிராமில் தங்கத்தை வைத்திருப்பது கெட்ட விஷயம். எனவே, எல்லா தங்கத்தையும் அரசிடம் சரண்டர் பண்ணிவிடுங்கள் என சொல்வார் என யாருக்கும் தெரியாது. ரூஸ்வெல்ட் சொல்லி இருக்கிறார் என்பதை மட்டும் குறிப்பிடுகிறேன். அமெரிக்காவில் நடந்த இது எங்கு வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதற்கான சிக்னலாக கூட இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை பார்க்கலாம்.
கவனம்
இப்போது நாம் தங்கத்தை வாங்கலாம். தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்கும் என பலரும் சொன்னார்கள். ஆனால், ஜி வந்து வரியை குறைக்கவில்லை… தங்கத்தை வாங்க வேண்டாம் என மட்டும் சொல்லிவிட்டார். தங்கம் வாங்குவது குறித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், நிறைய வார்னிங் வந்து கொண்டே இருக்கிறது” என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்




