• Login
Monday, August 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
August 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(31) தெரிவித்துள்ளார்.


“நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். பதிலடி கொடுக்கப்படும்,” என்று அவர் பொக்ஸ் நியூஸிடம் கூறினார்.

 தாக்குதல்களை முறியடித்த அமெரிக்க வான்பாதுகாப்பு அமைப்பு

ஈரானிலிருந்து வந்த பெரும்பாலான தாக்குதல்களை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக அவர் குறிப்பிட்டார். ஒரு ஏவுகணை “குறிப்பிடத்தக்க எதையும் தாக்காது” என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அமெரிக்கப் படைகள் அதை வான்வெளியைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப் | Us To Respond To Iranian Attacks Trump



ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அஸ்ராக் விமானத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாகவும், அதே நேரத்தில் யுஏஇ-யில் உள்ள அல் மின்ஹாத் விமானத் தளத்தை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாகவும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) திங்கள்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.


முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமான ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் வைப்பதைத் தடுக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை லராக் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறியது.

ஈரான் தொடர்பில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட சந்தேகம்


ஜூன் மாத புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து, தெஹ்ரானுக்கு எதிரான இரண்டு வார கால குண்டுவீச்சுத் தாக்குதலை அமெரிக்கா ஜூலை மாத இறுதியில் முடிவுக்குக் கொண்டுவந்தது.அதன்பிறகு ஈரானியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப் | Us To Respond To Iranian Attacks Trump


மேலும், தெஹ்ரான் ஒரு சந்திப்பை விரும்புவதாகக் கூறி, ஒரு இராஜதந்திர முன்னேற்றம் குறித்து ட்ரம்ப் தனது சந்தேகத்தையும் வெளிப்படுத்தினார். ஈரானியர்கள் “சந்திக்க மிகவும் விரும்புகிறார்கள்” என்று கூறிய அவர், “அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வார்கள் என்று நம்ப முடியுமா” என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.

 “பொருளாதாரப் பயங்கரவாதம்” 

தற்போதைய அமெரிக்கத் தடைகள் “கடுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன” என்றும் அவர் கூறினார். கடந்த வாரம், அமெரிக்கா ‘ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.

அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப் | Us To Respond To Iranian Attacks Trump

இது, ஈரானின் முக்கிய பொருளாதார உயிர்நாடிகள் என்று வோஷிங்டன் விவரித்த அதன் எண்ணெய், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தங்கம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சொத்துத் துறைகளை இலக்காகக் கொண்டது.

தெஹ்ரானுக்கு எதிரான இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகவும், சமீபத்திய இந்தத் தடைகள் நடவடிக்கையை “பொருளாதாரப் பயங்கரவாதம்” என்றும் ஈரான் தெரிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

 ஸ்தாப்பாக்  அடுக்குமாடிக் குடியிருப்பின் 22ஆவது மாடியில் இருந்து கல்லூரி மாணவர் விழுந்து உயிரிழந்தார் | Makkal Osai

Next Post

ஈரானுடன் நெருக்கமாக ஒத்துழைத்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஈரானுடன் நெருக்கமாக ஒத்துழைத்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

ஈரானுடன் நெருக்கமாக ஒத்துழைத்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது - பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin