கோலாலம்பூர்:
நாட்டில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான அரிசி விநியோகத்தை உறுதி செய்ய வேண்டுமானால், மலேசியாவின் அரிசி தன்னிறைவு விகிதம் (Self-Sufficiency Ratio – SSR) குறைந்தபட்சம் 80 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் சாபு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு அரிசி உற்பத்தியை அதிகரிக்கவும், விநியோகச் சங்கிலியை மேம்படுத்தவும் தமது அமைச்சகம் பல்வேறு புதிய உத்திகளைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
உற்பத்தித் திறனை உயர்த்த நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பெருமளவிலான நெல் சாகுபடி திட்டங்களை விரிவுபடுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் அமைச்சகம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்த ஒரு புதிய வாய்ப்பாக, நெல் வயல்களில் நன்னீர் இறால் வளர்ப்பை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துமாறு அமைச்சர் பரிந்துரைத்தார்.
சாதகமான இயற்கைச் சூழல் இருந்தபோதிலும் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விவசாயிகள் ஒரே நேரத்தில் இரட்டை வருவாயைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
The post நெல் வயல்களில் நன்னீர் இறால் வளர்ப்பு: விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க அமைச்சர் முஹமட் சாபு பரிந்துரை! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

