பால் மா, புளிக்கப்பட்ட பால் பானங்கள் மற்றும் தயிர் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ‘BREAKING NEWS’ என்ற பெயரில் பரவிவரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நிராகரித்துள்ளது.
பரவலாகப் பகிரப்படும் அந்தப் பதிவில் உள்ள விலை அதிகரிப்புத் தகவல்கள் முற்றிலும் போலியானவை என்றும், அதிகாரப்பூர்வ அல்லது நம்பகமான மூலங்கள் மூலம் சரிபார்க்காமல் இதுபோன்ற தகவல்களை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாமெனப் பொதுமக்களை அந்த அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.
பரவிவரும் அந்தப் பதிவின்படி, ஒரு கிலோகிராம் பால் மா பாக்கெட்டின் விலை 260 ரூபாவினாலும், புளிக்கப்பட்ட பால் பானம் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், தயிர் கோப்பை ஒன்றின் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பகிரும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், தகவல்களைப் பரப்புவதற்கு முன்பு அவற்றைச் சரிபார்க்க வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சந்தேகத்திற்கிடமான விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் ஏதேனும் இருப்பின், அவற்றை நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு நுகர்வோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


