ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே இருந்த பிளவுகளை வலுப்படுத்திய அதே வேளையில், அவை ஒன்றிணைந்து புதிய பாதுகாப்பு மாதிரிகளையும் முயன்று வருகின்றன என்று மத்திய கிழக்கு உலக விவகாரங்கள் மன்றத்தின் மூத்த ஆய்வாளர் முஹனத் செலூம் கூறியுள்ளார்.
பாதுகாப்பிற்கு ஈடாக இப்பகுதியில் அமெரிக்கத் தளங்களை அமைக்கும் தற்போதைய நிலைகள், கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்புக்கொண்ட பலன்களை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சில நாடுகள், “கட்டார் நேட்டோவுடனும், துருக்கியுடனும், குவைத் பாகிஸ்தானுடனும் செய்தது போன்ற இருதரப்பு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒப்பந்தங்களை செய்து விவகாரத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
புதிய வகை ஒப்பந்தங்கள்
மேலும், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்போது ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த புதிய வகை ஒப்பந்தங்கள் இன்னும் சோதிக்கப்பட வேண்டும் என்றும், போரினால் வளைகுடா நாடுகளும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் விளக்கியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அதேசமயம் ஓமான், சவூதி அரேபியா அந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை, என்றும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

