யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிற்கான தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதமாக பயணிக்கும்
பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த தொடருந்து பொதுஹெர தொடருந்து நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர தொடருந்து நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து தொடருந்துகளும் தாமதமாகவே பயணிக்கும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! ‘ |

