பருவம் தவறிய மழையால் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயத்தின் விளைச்சல் பாதித்துள்ளது. அதேபோல, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் சிறிய அளவிலான காரீஃப் வெங்காய வரத்தும் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோல, சர்க்கரை விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

