Last Updated:
நேபாள வெள்ளம்: பிஹார் மாநில முதலமைச்சருடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்.
நேபாள நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுல்லா சென்ற 50 பேரும் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.


