இன்று பிற்பகல் ஷா ஆலம், தாமான் ஆலம் மெகாவில் நடந்த கைகலப்பைத் தொடர்ந்து, மற்றொரு சந்தேக நபர் உயிரிழந்த நிலையில், போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஷா ஆலம் காவல் நிலையத் தலைவர் சருதின் சமா கூறுகையில், பிற்பகல் 2 மணியளவில் ஜாலான் மண்டோலின் 33/5 என்ற இடத்தில் ஒரு குழுவினருக்கு இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், கைகலப்பின் போது பலர் கத்தியால் வெட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவர் மீது நீல நிற பெரோடுவா அல்சா கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களின் நிலை தெரியவில்லை. இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு குறித்த தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி ஷம்சியா நூர் ஜகாரியாவையோ அல்லது தங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு சருதீன் கேட்டுக்கொண்டார்.



