சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் சனிக்கிழமை இரவு நேரிட்ட ரோலர் கோஸ்டர் விபத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் லேசான காயங்களுக்கு உள்ளாகினர் என்றும், அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் சுபாங் ஜெயா போலீஸ் படைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.
உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு சுமார் 9:00 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது, 11 முதல் 44 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 22 பேர் அந்த ரோலர் கோஸ்டரில் இருந்ததாக அவர் கூறினார்.
மறுநாள் காலை சுமார் 11:45 மணியளவில் இந்த விபத்து குறித்து போலீசாருக்குப் புகார் கிடைத்தது.
இந்த விபத்து குறித்தான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறிய வான் அஸ்லான், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் (வதந்திகளையும்) பரப்ப வேண்டாம் என்று வலியுறுத்தினார். மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-fmt
