இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்
சங்கிலி, மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (23-08-2026) இடம்பெற்றுள்ளது.
பேருந்தின் நடத்துநரும் மற்றும் சாரதியுமே இவ்வாறு நகையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
மரணச் சடங்கு
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை
செல்லும் 767 வழித்தட (4241 இலக்க) இ.போ.ச பேருந்தின் மதிய சேவையின் போது பயணித்த
பெண் ஒருவர் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு இன்னொரு உறவினர்
வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த
இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை அவர் உணர்ந்துள்ளார்.

இதையடுத்து அவர் வழிநெடுகிலும் சென்று பார்த்தபோதும் சங்கிலியைக்
கண்டுபிடிக்கமுடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்பு, இனிச் சங்கிலி கிடைக்காது என்ற கவலையோடு மீண்டும்
வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்ல அதே அதே பேருந்தில் ஏறியுள்ளார்.
தங்கச்சங்கிலி
அப்போது அவர் தனது தங்கச்சங்கிலி காணாமல் போன விடயத்தை பேருந்தின் நடத்துநருக்கும் மற்றும் சாரதிக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்போது அவர்கள், நீங்கள்
அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது எனவும் அதைக் கண்டெடுத்து பத்திரமா
வைத்திருக்கிறோம் எனவும் கூறி அதனை ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் பேருந்தை சுத்தம் செய்தபோது,
அந்தச் சங்கிலியின் எஸ்வடிவிலான இணைப்புப் பகுதியையும் கண்டெடுத்து அதனையும்
உரிய பெண்ணிடம் சேர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு 10 லட்சம் ரூபா பெறுமதியான நகையினைக் கண்டெடுத்து
உரியவர்களிடம் சேர்ப்பித்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதியான மனோகரன்
சயந்தன் மற்றும் நடந்துநரான இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் நேர்மைப்பண்பை பேருந்தில இருந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

