கோத்த கினாபாலு: கெனிங்காவில் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் 16 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சுங்கை பெகலான் ஆற்றில் ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர் காலக்கெடுவுக்குள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இறந்த 16 வயதான ஜாஸ்தி கோமன், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 10.34 மணிக்கு, இருவரும் தண்ணீரில் விழுந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் உள்ள காம்பங் பக்தி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டார். 13 வயதான கெண்ட் ரோமெல் போன்ஸ் கசெரஸை மீட்புக் குழுவினர் இன்னும் தேடி வருகின்றனர்.
The post கெனிங்காவு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

