• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜகார்த்தாவை விட 3 மடங்கு பெரிய நிலப்பரப்பு தீக்கிரை: சரவாக்கில் அதிகரிக்கும் எல்லை தாண்டிய புகைமூட்டம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜகார்த்தாவை விட 3 மடங்கு பெரிய நிலப்பரப்பு தீக்கிரை: சரவாக்கில் அதிகரிக்கும் எல்லை தாண்டிய புகைமூட்டம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

போர்னியோ தீவுப் பகுதியில் பரவி வரும் பயங்கரக் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்தோனேசிய அரசாங்கம் மேலும் 1,500 ராணுவ வீரர்களை உடனடியாகக் களமிறக்கியுள்ளது.

இந்தோனேசிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. இது இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் மொத்த பரப்பளவை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்னியோவில் நிலவும் காட்டுத் தீ தடுப்புச் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, தீயணைப்புப் பணிகளை விரைவுபடுத்த கூடுதல் ராணுவப் படைகளை அனுப்ப உத்தரவிட்டார்.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தவும், வான்வழியாக நீர தெளிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் 6 சிறப்பு ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

தீவிரமடைந்து வரும் வறட்சியான வானிலை மற்றும் ‘எல் நினோ’ (El Nino) தாக்கத்தின் காரணமாகக் காட்டுத் தீயின் வீரியம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமந்தான் காட்டுத் தீயினால் உருவாகியுள்ள அடர்ந்த எல்லை தாண்டிய புகைமூட்டம், எல்லை கடந்து மலேசியாவின் போர்னியோ பகுதியான சரவாக்கிற்குள் பரவியுள்ளது. இதனால் சரவாக்கின் முக்கிய பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு (API) தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்து வருகிறது.

புகைமூட்டத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது தவறாமல் முகக்கவசம் அணியுமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



Read More

Previous Post

100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு… காத்திருக்கும் பேராபத்து! சூப்பர் எல் நினோ தாக்கம் எப்படி இருக்கும்?

Next Post

பிள்ளைகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய தாய் கைது

Next Post
பிள்ளைகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய தாய் கைது

பிள்ளைகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய தாய் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin