உயிரிழந்த குழந்தையும் அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவைப் பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் நேற்றிரவு (21) உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையும் அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவைப் பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, உறவினர் ஒருவர் உழவு இயந்திரத்தை இயக்கியுள்ளார். குழந்தைகள் இழுவைப் பகுதியில் இருப்பதை கவனிக்காத நிலையில், வீட்டின் முன்றலில் இயந்திரத்தைத் திருப்ப முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது உழவு இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த 3 வயது குழந்தை, அதன் பின்பக்க சக்கரத்தில் சிக்கியதில் படுகாயமடைந்துள்ளது.
உடனடியாக குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தை இயக்கிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

