இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் சேவை 2 நாட்களுக்கு வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் HDFC வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கியின் டெபிட் கார்டு (Debit card) மற்றும் கிரெடிட் (Credit card) ஆகியவை நேற்று மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வேலை செய்யவில்லை என்று பலரும் புகார் தெரிவித்தனர். ஆனால், ஏற்கெனவே இது குறித்து HDFC வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்மையில் எச்டிஎஃப்சி வெளியிட்ட அறிவிப்பில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் ஜூன் 4 மற்றும் ஜூன் 6 ஆகிய இரண்டு தேதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில மணி நேரங்களுக்கு இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில் மூலம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: Gold rate Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
அதன்படி, ஜூன் 4ஆம் தேதி மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. இதேபோல், நாளை (ஜூன் 6) மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான சிஸ்டம் மேம்படுத்துதல் பணி நடைபெறவுள்ளதால், அப்போதும் அந்த கார்டுகளை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது ஏடிஎம் பரிவர்த்தனைகள், கார்டு ஸ்வைப், ஆன்லைன் பேமெண்டுகள் மற்றும் நெட்சேப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது பரிவர்த்தனைகளை திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்றும் எச்டிஎஃப்சி வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே, மே 25ஆம் தேதி HDFC வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் நிறுத்தப்பட்டன.
.
&w=750&resize=750,375&ssl=1)
