பெங்களூரில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கும்.. வாடகை வீடு தேடப்போன இடத்தில் இப்படியா..?
ஒவ்வொரு நாளும் பல்வேறு சர்ப்ரைஸ்-ஐ கொடுத்து வரும் நகரம் தான் பெங்களூர். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல் நாம் பார்க்கும் நபர்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர்கள் பெங்களூரில் அதிகம் என்பது சமுகவலைத்தளத்தில் வரும் பதிவுகளை பார்க்கும்போது தெரிகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளதாக ஒரு டெக்கி சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடு வாடகைக்கு தேடப்போன இடத்தில் புதிய வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக அவர் செய்த பதிவு பலருக்கும் வியப்பை அளித்ததுள்ளது. ஆனால் இதேவேளையில் இந்த பதிவை பலரும் ஒரு பொய்யான பதிவு எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

மைக்ரோசாப்ட் மற்றும் Mercor AI நிறுவனங்களில் பணியாற்றிய சிவ், சமூக வலைத்தளத்தில் பெங்களூரில் தனது சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஷிவ் டிவிட்டரில் tomato என்ற பெயரிலும், இன்ஸ்டாகிராமில் skinnyiitian என்ற பெயரிலும் இயங்கி வருகிறார்.
சிவ் தனது பதிவில் இதுதான் பீக் பெங்களூர் மொமெண்ட் என்று துவங்கும் இவரது பதிவில், சிவ் பெங்களூருவில் வீடு தேடி சென்ற போது, அவர் பார்க்கச் சென்ற நபர் அப்போது அங்கு இல்லை. அதனால், அதே அப்பார்ட்மென்ட்டில் இருந்த மற்றொரு வீட்டை அதன் இன்டீரியர்-ஐ பார்ப்பதற்காக சிவ் பார்க்கச் சென்றுள்ளார்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் Legal AI என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள். இவரும் டெக் துறையில் இருக்கும் காரணத்தால் Legal AI ப்ராடெக்ட், டெவலப்மென்ட், அதன் வளர்ச்சி பாதை என பலவற்ரை ஆலோசனை செய்துள்ளனர்.
சிவ் கேட்ட கேள்விகள் மற்றும் அவர் காட்டிய ஆர்வம் நிறுவனர்களை கவர்ந்தாகவும், இதன் வாயிலாக அவர்களின் நிறுவனத்தில் பணியாற்ற அழைத்தாகவும் இப்பதிவில் ஷிவ் தெரிவித்துள்ளார்.
Legal AI ஸ்டார்ட்அப் நிறுவனம் தற்போது சென்னை மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் உள்ளன. துபாய் மற்றும் மலேசியாவில் அலுவலகங்களைத் தொடங்க அந்த நிறுவனர்கள் திட்டமிட்டு வருவதாக தனது பதிவில் தெரிவித்தார் ஷிவ்.
வீடு தேடி சென்ற இடத்தில் வேலை கிடைத்தது பெரும் ஆச்சரியம் என தெரிவித்தார் ஷிவ். ஆனால் நெட்டிசன்கள் ஷிவ் சரியாக தனது பெயரில் இல்லாதது, maleshiya என தவறாக எழுதியது, டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் வேறு வேறு ப்ரொபைல் பிக்சர் வைத்தது போன்றவை இது ஒரு பொய்யான பதிவு என்பதை காட்டுவதாக நெட்டிசன்கள் அடுத்தடுத்து கமெண்ட் செய்தனர்.
விளம்பரம் தேடுவதற்காகவும், மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகழும் இத்தகைய போலியாக பதிவுகள் செய்யப்படுகிறது. மேலும் இந்த கமெண்ட்களுக்கு ஷிவ் எவ்விதமான விளக்கமும் அளிக்காதது இப்பதிவில் நம்பக தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

