கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் (Samburu County) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 4 அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் உள்ளூர் விமானி உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கென்ய அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
உலங்கு வானூர்தி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடக்கு கென்யாவில் உள்ள லோயிசாபா சரணாலயத்தில் (Loisaba Conservancy) இருந்து எவாசோ நயிரோ (Ewaso Nyiro) பகுதிக்குச் சென்றபோது ஓலோலோக்வே மலையின் அடிவாரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

லேடி லோரி ஹெலிகாப்டர்ஸ் (Lady Lori Helicopters) நிறுவனத்திற்குச் சொந்தமான யூரோகாப்டர் EC130 B4 ரக உலங்கு வானூர்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
நைரோபியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கென்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதுடன் தேவையான தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதி மிகவும் கடினமான நிலப்பரப்பைக் கொண்டதாக இருப்பதால், கென்ய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து கென்ய சிவில் விமானப் போக்குவரத்து வாரியம் (KCAA) தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

