Last Updated:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் எத்தனாலைப் பயன்படுத்துவதால், வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறைந்து, நாட்டின் பொருளாதாரம் வலுவடைகிறது.
E10 பெட்ரோல் என்பது 90% சாதாரண பெட்ரோல் மற்றும் 10% எத்தனால் (Ethanol) கலந்த ஒரு எரிபொருள் கலவையாகும். இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இத்தகைய எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. தாவரங்கள், கரும்புச் சாறு, சோளம் மற்றும் பிற விவசாயக் கழிவுகளிலிருந்து பெறப்படும் ஆல்கஹால் சார்ந்த ஒரு புதுப்பிக்கத்தக்க எரிபொருளே எத்தனால் ஆகும்.


