ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்த 35 ஆண்டுகளுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய தலைவர் இந்த நாட்டின் அரசியல் களத்தில் இல்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவையும், நாட்டின் மீதான அவரது எல்லையற்ற அர்ப்பணிப்பையும் பாராட்டிய அமைச்சர், மக்கள் அவரை ஒரு மாபெரும் ஜனாதிபதி என்று அழைப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசியல் ரீதியாக போட்டியிடக்கூடிய தலைவர் எவருமில்லை
அடுத்த 25, 30 அல்லது 35 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியுடன் அரசியல் ரீதியாகப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய தலைவர் யாராவது இருக்கிறாரா என்பதைக் காட்டுமாறு எதிர்க்கட்சிக்கு அமைச்சர் சவால் விடுத்தார்.

தற்போது அப்படிப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்றும், ஜனாதிபதியின் அரசியல் பயணம் மிகவும் வலிமையானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட வலிமையான மக்கள் தளத்தின் முன் எதிர்க்கட்சி முற்றிலும் பலவீனமடைந்துள்ளது என்று அருண ஜெயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்ற இருக்கைக்குள் முடங்கிய எதிர்க்கட்சியினர்
நாம் அமைத்துள்ள இந்த மாபெரும் மக்கள் அரசாங்கத்தின் பலத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு என்ன செய்துவிட்டோம்? அவர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் இருக்கைகளுக்குள் முடக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் அவர்களுக்கு இனி அரசியல் என்பதே இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

