LPG: e-KYC ஏன் முக்கியம்..? மத்திய அரசு அறிவித்த கால நீட்டிப்பு..!
ஈரான் போர் துவங்கிய பின்பு இந்தியாவுக்கான எல்பிஜி சப்ளை குறைந்த நிலையில் மத்திய அரசு அடுத்தடுத்து பல மாற்றங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்து அனைத்து மக்களுக்கு சரியாக சிலிண்டர் சப்ளை உறுதி செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே மத்திய அரசு சமீரத்தில் அனைத்து சிலிண்டர் உரிமையாளர்களையும் e-KYC உறுதி செய்ய அறிவுறுத்தி இதற்காக ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் பல கோடி மக்கள் கடைசி நாளில் e-KYC உறுதி செய்ய முயற்சி செய்த காரணத்தால் சர்வர் முடங்கியது.

இதனால் மத்திய அரசு e-KYC-க்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 16ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 23 ஆக மாற்றியது. இதன் மூலம் கூடுதலாக ஒரு வார காலம் அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது.
e-KYC செய்வது மூலம் ஒவ்வொரு சிலிண்டரும் உரிய நபருக்கு தான் சொல்கிறதா என்பதை உறுதி செய்யப்படும், குறிப்பாக போலியான கேஸ் இணைப்புடன் கள்ள சந்தையில் விற்பது போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும், முக்கியாக சிலிண்டருக்கான மானியம் உரிய நபருக்கு செல்லும். இவை அனைத்தையும் உறுதி செய்யவே மத்திய அரசு e-KYC அறிமுகம் செய்தது.
இந்த e-KYC செய்யாவிடில் மத்திய அரசு கொடுக்கும் மானியம் கட் செய்யப்படும், அரசு உங்களுடைய கேஸ் இணைப்பை துண்டிக்க கூடும். இதன் மூலம் போலியான கணக்குகள் முடக்கப்படும்.
இதேவேளையில் மத்திய அரசு தரப்பில் முக்கியமான விளக்கம் கொடுத்துள்ளது, இந்த e-KYC என்பது ஏற்கனவே உறுதி செய்யப்படாத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அதாவது இதுவரையில் e-KYC செய்யாத நபர்களுக்கு மட்டுமே என்பதை விளக்கியுள்ளது.
இதுக்குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமுக வலைத்தள பதிவில், e-KYC என்பது புதிய நடைமுறையில்லை. சிலிண்டர் விநியோகத்தில் இருக்கும் முரண்பாடுகளை தீர்க்க மத்திய அரசு பல வருடங்களாக எடுத்து வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த e-KYC செயல்முறை வந்துள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பலன் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் e-KYC செய்ய வேண்டும். மற்றவர்கள் ஒருமுறை செய்தால் போதும் என்பதையும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எல்பிஜி சப்ளையை அதிகரிக்க மத்திய அரசு அனைத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் அப்ஸ்ட்ரீம் நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் டார்கெட் கொடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எல்பிஜி உற்பத்தியை மேம்படுத்தி வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது மத்திய அரசு.

