20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29ஆம் தேதி வரை போட்டிகள் களைகட்டவுள்ளன.
லீக் மற்றும் சூப்பர் எயிட் (Super-8) சுற்றுகளைத் தொடர்ந்து, அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ளன. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், கயானாவில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் விளையாடும். முதல் அரையிறுதி, டிரினிடாட்டில் ஜூன் 27ஆம் தேதி காலையில் இந்திய நேரப்படி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இரண்டாவது அரையிறுதி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது.
முதல் அரையிறுதிக்கு ரிசர்வ் டேவாக, இரண்டாவது போட்டிக்கான காலம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
வேலைக்கு ஆட்கள் தேவை… ஆர்டர்கள் குவிவதால் `டாலர் சிட்டி’ திருப்பூருக்கு ஜாக்பாட்!
ஆனால் இரண்டாவது போட்டியின்போது மழை குறுக்கிட்டால், கூடுதலாக 250 நிமிடங்கள் மட்டும் கொடுக்கப்பட்டது. அதற்குள் போட்டி நடத்தி முடிக்கப்படாவிட்டால், சூப்பர்-8 சுற்றில் முன்னிலை பெற்ற அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
