• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சாப்பிட்ட பிறகு தூக்கம் வர காரணம் இதுதான்! – தவிர்க்க இந்த 7 உதவிக்குறிப்புகள் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சாப்பிட்ட பிறகு தூக்கம் வர காரணம் இதுதான்! – தவிர்க்க இந்த 7 உதவிக்குறிப்புகள் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சாப்பிட்ட பிறகு பலர் சோர்வாகவோ அல்லது தூக்கக் கலக்கமாகவோ உணருவது இயற்கையான ஒன்று. குறிப்பாக மதிய வேளையிலோ அல்லது வயிறு நிறைய சாப்பிட்ட பிறகோ இந்த உணர்வு அதிகமாக இருக்கும். இது பெரும்பாலும் ஒரு இயல்பான உடல் எதிர்வினையாக இருந்தாலும், சிலருக்கு இது அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளில் கடுமையான இடையூறை ஏற்படுத்தும். சாப்பிட்ட பிறகு ஏன் இது நிகழ்கிறது என்பதையும், என்னென்ன காரணிகள் இந்தப் பிரச்சனையை மோசமாக்கலாம் என்பதையும் புரிந்துகொள்வது அவசியம். உங்களுக்கு தொடர்ந்து மயக்கமாகவோ அல்லது தூக்கக் கலக்கமாகவோ இருந்து, அது உங்கள் அன்றாடப் பணிகளைப் பாதிக்கத் தொடங்கினால், அதைப் புறக்கணிக்காமல் தீர்வு காண்பது நல்லது.

சாப்பிட்ட பிறகு நமக்கு ஏன் தூக்கம் வருகிறது?

நிபுணர்களின் கூற்றுப்படி, சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவதற்கு முக்கியக் காரணம் உணவின் அளவும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களுமே ஆகும்.

மாவுச்சத்து நிறைந்த உணவுகள்: அரிசி, ரொட்டி, பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது, இரத்தச் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி, சிலருக்குத் தூக்கக் கலக்கத்தை உண்டாக்கும்.

புரதம் நிறைந்த உணவுகள்: முட்டை, பருப்பு வகைகள் மற்றும் இறைச்சி போன்ற புரதம் நிறைந்த உணவுகளில் ‘டிரிப்டோஃபான்’ (Tryptophan) என்ற அமினோ அமிலம் உள்ளது. இது, மூளையில் தூக்கம் மற்றும் தளர்வுடன் தொடர்புடைய ‘செரோடோனின்’ மற்றும் ‘மெலட்டோனின்’ போன்ற வேதிப்பொருட்கள் உற்பத்தி ஆக உதவுகிறது.

அதிகப்படியான உணவு: மிக அதிகமாக உணவை உட்கொள்ளும்போது, அதை ஜீரணிக்க உடல் அதிக ஆற்றலைச் செலவழிக்க நேரிடுகிறது. இதன் விளைவாக உடல் மற்றும் மூளைக்குக் கிடைக்கும் ஆற்றல் குறைந்து, உடல் கனமாகவும் சோர்வாகவும் உணர வழிவகுக்கிறது.

தூக்கமின்மை: இரவில் போதுமான தூக்கம் இல்லாதிருந்தால், பகல் நேரங்களில் உணவுக்குப் பிறகான சோர்வு மேலும் அதிகரிக்கும்.

சாப்பிட்ட பிறகு ஏற்படும் தூக்கத்தைத் தவிர்க்க என்ன செய்வது?

இந்தச் சோர்விலிருந்து விடுபடவும், புத்துணர்ச்சியுடன் இருக்கவும் பின்வரும் எளிய உத்திகளைப் பின்பற்றலாம்:

அளவோடு சாப்பிடுங்கள்: ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, சிறிய அளவிலான உணவை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

சத்தான உணவைத் தேர்ந்தெடுங்கள்: காய்கறிகள், முழு தானியங்கள், நல்ல புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய சீரான உணவை உட்கொள்ளுங்கள்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் இனிப்பு உணவுகளைத் தவிர்க்கவும்: அதிக இனிப்புள்ள மற்றும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இரத்தச் சர்க்கரையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும்.

உணவுக்குப் பின் இலகுவான நடைப்பயிற்சி: சாப்பிட்ட முடித்த 15-20 நிமிடங்களுக்குப் பிறகு சுமார் 10-15 நிமிடங்கள் மெதுவான நடைப்பயிற்சி மேற்கொள்வது, ஜீரணத்தை தூண்டி தூக்க உணர்வைக் குறைக்கும்.

ஏராளமான தண்ணீர் குடியுங்கள்: நாள் முழுவதும் நல்ல அளவில் தண்ணீர் அருந்துவது வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்க உதவும்.

இரவில் சரியான நேரத்தில் தூங்குங்கள்: இரவில் தரமான 7-8 மணி நேர தூக்கம் பகலில் அதிக சோர்வு ஏற்படாமல் தடுக்கும்.

உங்கள் உடலை கேளுங்கள்: சில உணவுகள் உங்களுக்கு குறிப்பாக மயக்கத்தைத் தருமானால், அவற்றின் அளவைக் குறைத்து அல்லது தவிர்த்துப் பாருங்கள்.

சாப்பிட்ட பிறகு உங்களுக்கு அதிகப்படியான தூக்கக் கலக்கமும், நீடித்த சோர்வும் ஏற்பட்டால், அது இரத்த சோகை, தைராய்டு பிரச்சனை அல்லது நீரிழிவு போன்ற எளிய உடல்நலக் குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, உங்கள் வழக்கமான முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றால், மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

Read More

Previous Post

தோல்வி முகத்தில் பாஜக.. தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்! பரபரப்பு | Prashant Kishor on Bihar Bypoll Win: Why BJP Lost Bankipur? Gen Z Anger & Samrat Choudhary Explained

Next Post

ஸ்பெயினில் தொடரும் காட்டுத் தீ.. வானிலை மைய எச்சரிக்கையால் மக்கள் கவலை! | World News (உலக செய்திகள்)

Next Post
ஸ்பெயினில் தொடரும் காட்டுத் தீ.. வானிலை மைய எச்சரிக்கையால் மக்கள் கவலை! | World News (உலக செய்திகள்)

ஸ்பெயினில் தொடரும் காட்டுத் தீ.. வானிலை மைய எச்சரிக்கையால் மக்கள் கவலை! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin