• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

3,000 இந்தியர்களை நாடு கடத்திய கனடா.. கை கட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு! | Canada Deports Over 3,000 Indians in 6 Months, Nearly Matching All of 2025

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
3,000 இந்தியர்களை நாடு கடத்திய கனடா.. கை கட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு! | Canada Deports Over 3,000 Indians in 6 Months, Nearly Matching All of 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Published: Wednesday, August 12, 2026, 21:47 [IST]

ஒட்டவா: கனடாவிலிருந்து கடந்த 6 மாதங்களில் சுமார் 3,000க்கும் அதிகமான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த இந்தியர்கள், கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுவதை, மத்திய அரசு வெறுமென வேடிக்கை மட்டும் பார்ப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு பக்கத்தில் இருக்கும் நாடுதான் கனடா. உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு என்கிற அந்தஸ்தை பெற்றிருந்தாலும்.. அந்நாட்டை வளர்ச்சி அடைய வைக்க.. வேலைக்கு ஆட்கள் கிடையாது. அங்கு மக்கள் தொகை ரொம்ப கம்மி. எனவே அந்நாட்டு அரசு வெளிநாட்டினரை தாரளமாக வரவேற்றது.

Canada Deports Over 3 000 Indians

கனடா சென்ற இந்தியர்கள்

இப்படித்தான் இந்தியர்கள் கனடாவுக்கு சென்றனர். டிரைவராக, மருத்துவ பணியாளர்களாக, செவிலியர்களாக, ஐடி ஊழியர்களாக, பொறியாளர்களாக இந்தியர்கள் கனடாவுக்கு போயிருந்தனர். இவர்களை வைத்து எல்லா வேலையும் வாங்கிவிட்டு.. இப்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்று காரணம் சொல்லி.. இந்தியர்களை வெளியேற்றும் வேலையில் இறங்கியிருக்கிறது கனடா.

வெளியே அனுப்பும் கனடா

கனடா பார்டர் சர்வீசஸ் ஏஜென்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த ஆண்டு, முதல் 6 மாதங்களில் மட்டும் கனடாவிலிருந்து 3,323 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். அதாவது அந்நாட்டு அரசு.. இந்தியர்களை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு மக்களை வெளியே அனுப்புவதில் கனடா அரசு ரொம்பவும் சீரியஸாக இறங்கி வேலை பார்த்து வருகிறது.

முதலிடத்தில் இந்தியா

இந்த லிஸ்டில் மெக்சிகோதான் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். அந்நாட்டை சேர்ந்தவர்களைதான் கனடா அதிக அளவில் வெளியேற்றி வந்தது. தற்போது முதல்முறையாக இந்தியர்கள் இந்த இடத்தை பிடித்திருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 88% ஆகும். இதே நிலைமை நீடித்தால்.. இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதில் புதிய உச்சம் தொடும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா இந்த 6-7 மாதங்களில் 1,273 இந்தியர்களை மட்டுமே நாடு கடத்தியிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது கனடா 3 மடங்கு அதிகமாக இந்தியர்களை அனுப்பி வைத்திருக்கிறது.

காரணங்கள் என்ன?

குடியேற்ற விதிகளை சரியாக பின்பற்றவில்லை, அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபோதும் தொடர்ந்து கனடாவில் வசித்தது, விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது, விசா மோசடி மற்றும் போலி ஆவணங்களை கொடுத்து ஏமாற்றுவது, குற்றச்செயல்களில் ஈடுபடுவது என இப்படியான காரணங்களால்தான் இந்தியர்களை வெளியேற்றுகிறோம் என கனடா கூறியிருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இன்னும் 7,669 இந்தியர்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள்.

உண்மை என்ன?

உண்மை என்னவெனில், கனடாவில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் அந்நாட்டு அரசு தோல்வியடைந்திருக்கிறது. இருப்பவர்களுக்கு வீடு கொடுக்க முடியவில்லை, இலவச மருத்துவத்திற்கு நிறைய பணம் செலவாகிறது, இதுபோக அரசின் பணம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு செலவாகிறது என்று சொல்லிதான்.. இந்த நாடு கடத்தும் வேலையை கனடா செய்திருக்கிறது.

மத்திய அரசு மௌனம்

கனடாவில் இந்தியர்கள் ஒன்னும் சும்மா தங்கியிருக்கவில்லை. அந்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள். ஆனால், கடைசியில் கரும்பு சக்கையை தூக்கி போடுவதை போல.. இந்தியர்களை கனடா தூக்கி வீசியுள்ளது. இது பற்றி மத்திய அரசு வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

English summary

Canada Deports Over 3,000 Indians: Over the past six months, more than 3,000 Indians have been deported from Canada. Many have criticized the Central Government for merely looking on as Indians—who contributed to that country’s development—are sent back without a shred of compassion.

Read More

Previous Post

ட்ரம்பிற்குப் புடின் அனுப்பிய விசேட பரிசு…! ரஷ்யாவின் இராஜதந்திர நகர்வு

Next Post

Post Office | ஒருமுறை முதலீடு; மாதம் ரூ.5,550 கிடைக்கும்.. தங்கம் போன்ற போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office | ஒருமுறை முதலீடு; மாதம் ரூ.5,550 கிடைக்கும்.. தங்கம் போன்ற போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Post Office | ஒருமுறை முதலீடு; மாதம் ரூ.5,550 கிடைக்கும்.. தங்கம் போன்ற போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin