2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மீட்சி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்து வருகின்றது.
இவற்றுள் கணிசமான பகுதி அரச அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகின்றது.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர் மட்டத்தில் அரசாங்கம் அதிகரித்துள்ளது.
கொடுப்பனவுகள்
2025 ஏப்ரல் மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2026இல் சம்பளம் அதிகரிக்கப்பட்டதோடு 2027இலும் அதிகரிக்கப்படும்.

மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருந்து நாம் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறுகின்றது. அதற்கு ஏற்பவே அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலும் அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

