Last Updated:
மெட்டல், ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் ஏற்றம் கண்டன.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து சவரனுக்கு 2,240 ரூபாய் அதிகரித்தது.
சர்வதேச பொருளாதாரம், அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவற்றை பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் 960 ரூபாய் உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் 2 ஆயிரத்து 240 ரூபாய் அதிகரித்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு மொத்தமாக 280 அதிகரித்து 13 ஆயிரத்து 480 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் காலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் மாற்றமின்றி 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்ந்து, 78 ஆயிரத்து 581 புள்ளிகளுடனும், நிஃப்டி 9 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 624 புள்ளிகளுடனும் நிலை பெற்றன. மெட்டல், ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் ஏற்றம் கண்டன.
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்தது!


