ஒடிசாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலத்தில் “சில அதிகாரிகள்” ஆட்சி நடைபெற்று வருவதாகவும், பாஜகவுக்கு வாக்களித்தால், ஒடிசா மண்ணை சேர்ந்த ஆற்றல் மிக்க, கடின உழைப்பாளி ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம் என கூறினார். “மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், மண்ணின் மைந்தன், உத்கல பூமியை ஆள்வான்; தமிழ் பாபு அல்ல” என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை மறைமுகமாக சாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

